ஏகஇறைவனின் திருப்பெயரால் ...
கடந்த கட்டுரையில்
திருடிய குற்றத்திற்காக கை துண்டிக்கப்படவிருந்த பாத்திமாவின் தண்டனையை ரத்து செய்யக்கோரி
உஸாமா(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் சிபாரிசு செய்ததைக் கேட்டதும் அமைதியே
உருவான அண்ணல் அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறியதைக் கண்ட உஸாமா(ரலி) அவர்கள்
தொடர்ந்துப் பேசுவதை நிருத்திக்கொண்டு தாம் செய்யவிருந்த பாவ காரியத்திற்காக அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் கேட்கும் படி அண்ணல் அவர்களிடமேக் கூறியதைப் பார்த்தோம்
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சனைக்காக யார் மீதும் எப்பொழுதும் கோபம் கொண்டதே இல்லை என்பதற்கான சில சம்பவங்களை கடந்த கட்டுரையில் பார்த்தோம் அண்ணல் அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்கள் மீது கூட கோபம் கொண்டதில்லை.
ஒரு முறை அண்ணல் அவர்களை
யூதப் பெண் ஒருத்தி விருந்துக்கு அழைத்து இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்ததை அறிந்த
அண்ணல் அவர்கள் அப்பெண்ணின் மீது கோபம் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்.
தங்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்ட இவளை கொன்று விடலாம் என்று அண்ணல் அவர்களின் ஆருயிர் தோழர்கள் கேட்டு கொண்ட பொழுது சகிப்புத்தன்மை கொண்ட சாந்த நபியவர்கள் வேண்டாம் என்றுக் கூறி விட்ட வரலாற்றையும் படித்திருக்கின்றோம்.
தங்களை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்ட இவளை கொன்று விடலாம் என்று அண்ணல் அவர்களின் ஆருயிர் தோழர்கள் கேட்டு கொண்ட பொழுது சகிப்புத்தன்மை கொண்ட சாந்த நபியவர்கள் வேண்டாம் என்றுக் கூறி விட்ட வரலாற்றையும் படித்திருக்கின்றோம்.
ஆனால் சமுதயாத்தை
சீர் குலைக்கும் எந்த தீமையை யார் செய்தாலும் அண்ணல் அவர்களுக்கு கோபம் வராமல் இருந்ததில்லை.
வரலாற்றில் ஓர் நாள்
ஜகாத் வசூலிப்பதற்காக
ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் அவர் ஜகாத்தை வசூலித்துக் கொண்டு வந்து அதில் சிறிதை
தனியாக ஒதுக்கி வைத்துக்கொண்டு இது எனக்குரியது இதை மக்கள் எனக்காக தனிப்பட்ட முறையில் வழங்கினார்கள்
என்று அவர் கூறியதும் இதைக் கேட்ட அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டு விடுகிறது
அண்ணல் அவர்கள் மக்களை அழைத்து மிம்பரின் மீது ஏறி நின்று மக்களே ! இவர் என்ன காரியத்தை செய்தார் என்பதை அறிந்தீர்களா ? இவர் தன்னுடைய தாய் வீட்டில் அல்லது தந்தை வீட்டில் இருந்திருந்தால் இதை அடைந்திருப்பாரா ? அரசு மூலம் சென்றதால் தானே இது அவருக்கு கிடைத்தது அவ்வாறிருக்க இது எப்படி இவருக்கு உரிமையாகும் ? என்று கண்டித்து உரை நிகழ்த்தி அவரின் விஷயமாக அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டி விடுகிறார்கள்
.
கடந்த ரமலான் மாதத்தில்
கமிஸனும், காம்ப்ளிமென்டுகளும் என்ற தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை அப்படியே
கீழேத் தருகிறோம். (இது உணர்வு பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது).
ஏகஇறைவனின் திருப்பெயரால்...
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச்
சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம்
பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, இறைத்தூதர்
அவர்களே! இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் அவரிடம், உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில்
உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா ? என்று
பாரும்! என்று கூறிவிட்டு மக்களை அழைத்து அவரது செயலைக் கண்டித்து உரை நிகழ்த்தி அல்லாஹ்விடம்
கைகளை உயர்த்தி ஒப்படைத்தார்கள்.... அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.
நூல்: புகாரி 6636.
கமிஸனும், காம்ப்ளிமென்டுகளும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்று அன்பளிப்புகள் என்றப் பெயரில் தான் கைக்கூலிகள், மறைமுகமாகவும், பகிரங்கமாகவும்
வழங்கப்பட்டு ஏராளமான விஷயங்கள் கை மாற்றப்படுகின்றன.
அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்களிலிருந்து, தொழில்
நிறுவனங்கள் தொடங்கி, சாதாரண ப்ளாட்பாரக் கடைகள் வரை பணியாற்றுபவர்களிடம்
இந்த நிலை காணப்படுகிறது. இவ்வாறு பெறப்படுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது
ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதை, மற்றவரால் ஏமாற்றப்படுவதை இஸ்லாம் ஒருக்காலும்
அனுமதிக்க வில்லை.
அரசு கருவூலத்திற்கு வர வேண்டியது குறைவின்றி
வரவேண்டும்,
முதலாளி
மார்களுடைய லாபம் கஜானாவிற்கு குறைவின்றி வரவேண்டும், தொழிலாளிகளுடைய
ஊதியம் வியர்வை காயும் முன் பேசப்பட்டதில் குறைவின்றி கிடைக்க வேண்டும். என்பதில் இஸ்லாம் பாரபட்சம்
பார்க்காது.
தொழில் நிறுவனங்கள் தொடங்கி ப்ளாட்பார கடைகள்
வரை தொழிலாளிகளே நிறுவனங்களை நடத்துபவர்களாகவும், பெரும்பாலும்
முதலாளிகள் பேங்க் பேலன்ஸை பார்ப்பவர்களாகவும், கல்லாக் கட்டுபவர்களாகவுமே இருப்பார்கள்.
விற்பனைப் பொருள்களை தொழிற்சாலைகளில் அல்லது
வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் (Purchashing manager) களுக்கு தொழிற்சாலை அதிபர்கள் கமிஸன் கொடுப்பார்கள்> அல்லது விலை உயர்ந்த அன்பளிப்புகளைக் கொடுத்து மடக்கி விடுவார்கள்.
அதனால் தொழிற்சாலைகளிலிருந்து
பொருட்களை கொள்முதல் செய்யும் போதே கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை மறைமுகமாக முதலாளி மார்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
அதற்கடுத்து அப்பொருட்களை கீழ்நிலையிலுள்ள சிறிய
நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் (Sales Reprasentive)> களிடம்
கமிஸனை, அல்லது
விலை உயர்ந்த அன்பளிப்பை சிறிய நிறுவனத்தார் கொடுத்து மடக்கி விடுவார்கள். அதனால் சிறிய
நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அப்பொருட்கள் சப்ளை செய்யப்படும் நிலை ஏற்படுகிறது.
இதனால் வாங்கும் போதும், விற்கும்
போதும் இவர்கள் பெற்றுக்கொள்ளும் அற்ப அன்பளிப்புகள் எனும் கைக்கூலியினால் முதலாளிகளுக்கு
லாபத்தின் பெரும் பகுதி குறைந்து விடுவதால் வளர்ந்த நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு
முன்னேற முடிவதில்லை அல்லது நிகராக முடிவதில்லை, சிலநேரம் இதனால்
நஷ்டத்தில் கூட முடிந்து நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
ஒரு கம்பெனி வளர்வதற்கும், வீழ்வதற்கும்
முக்கிய காரணமாக இருப்பது Purchashing manager, Sales Reprasentive ஆகும்.
இவர்கள் அல்லாத Show
Room
களில்
(Salseman) களாக பணிபுரிபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட
விலையை விட முதலாளி இல்லாத நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்று அதில் வரும் கூடுதல்
தொகையை தனக்கு ஒதுக்கி விடுகின்றனர்.
இன்னும் அந்த நிறுவனத்தில் இல்லாத பொருளைக் கேட்டு
வரும் கஸ்டமர்களுக்கு வெளியிலிருந்து வாங்கிக் கொடுத்து விட்டு அதனுடைய லாபத்தை எடுத்துக்
கொள்கின்றனர்.
இது சாதாரணமாக பெரிய தொழில் நிறுவனத்தில் தொடங்கி, ப்ளாட்பார்க்
கடைகள் வரை நடக்கின்றன.
அரசு அதிகாரிகள் பெறும் கையூட்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது
செய்தித் தாள்களில் வருவதைப் பார்க்கின்றோம். இது போன்ற நிறுவனங்களில் மேல்படி ஸ்டைலில்
அடிக்கும் கொள்ளைகள் வெளியில் தெரிவதில்லை.
கல்லாவிலிருந்து காசு எடுக்க வில்லை,
பொருட்களை கடத்துவதில்லை
அதனால் கமிஷன் பெறுவதிலோ, அல்லது
நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து கூடுதல் கிடைப்பதை எடுத்துக்கொள்வதிலோ, அல்லது
வெளியில் பொருளை வாங்கி கை மாற்றி விட்டு அதன் லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்வதிலோ
தவறில்லை என்று நினைத்துக் கொண்டு இவற்றை ஹலாலாக்க நினைப்பவர்கள் வேலை தேடி அலைவதற்கு
முன் தங்களின் வீட்டில் இருக்கும்போது இவைகள் கிடைத்திருக்குமா? இல்லை
எனும் போது அவைகளை அடைய நினைக்க கூடாது இது தான் நபி வழி.
உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில்
உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா ? என்று
பாரும்! என்று கூறிவிட்டு மக்களை அழைத்து அவரது செயலைக் கண்டித்து உரை நிகழ்த்தி அல்லாஹ்விடம்
கைகளை உயர்த்தி ஒப்படைத்தார்கள்..... அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்:
புகாரி 6636.
ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட சம்பளமும்,
இதர
சலுகைகளையும் மட்டுமே அடைந்து கொள்ளவேண்டும் லட்சங்களையம்,
கோடிகளையும்
கொட்டி நிறுவனம் நடத்தும் முதலாளியிடம் சம்பளம் பெறும் நம்மால் அவருக்கு எந்த வகையிலும்
பாதிப்பு ஏற்படக் கூடாது, பாதிப்பை
எற்படுத்தாத வகையில் பெறப்படும் அன்பளிப்புகளும் கூட நமக்கு தடை அதுவும் முதலாளியையேச்
சார்ந்ததாகும். மாறாக மேலதிகமாக அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையை மீறி எதையும் அடைய
நினைத்தால் கண்டிப்பாக அவைகளால் திருப்தி அடைய முடியாது.
...நன்மையால் நன்மையே விளையும் இந்த(உலகின்) செல்வம்
பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும்
(கால்நடைகளை,)
வயிறு
புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன, அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன.
பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும்.
இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும்.
இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.
6427 அபூஸயீத்
அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
மேய்ப்பாளன் கொண்டு விடுகின்ற இடத்தில் புல்லை
திண்ணுகின்ற வரை கால்நடைகளுக்கு உயிர் பிரியும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை
மாறாக தன்னுடைய விருப்பத்திற்கு சென்று வாய்க்கால் வரப்புகளில் விளையும் நச்சுத்தன்மை
கொண்ட செடி,
கொடிகளை
மேயும் போது செத்து விடும் நிலைக்கு தள்ளப்டுகின்றன.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின்
தூதரும் விதியாக்கிதை அடைந்து கொள்ளவும், தடையாக்கியதை தடுத்துக்கொள்ளும் வரை
மனித சமுதாயத்திற்கு இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக
எதாவது ஒரு காரணத்தை கற்பனை செய்து தடையை மீறிப் பொருளீட்டினால் அந்தப் பொருளாதாரத்தில்
அல்லாஹ்வின் அருள் ஏற்படுவதில்லை, அல்லாஹ்வின் அருள் ஏற்படாத பொருளாதாரத்தினால்
தேவைகள் நிறைவடைவதில்லை அதனால் தான் (முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர்
உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். ) என்ற உவமையை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முறையற்ற வழிகளில் ஈட்டும் பொருளாதாரத்தால் தேவைகள்
நிறைவடையாததால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு
தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வழியில் பொருளீட்டும்
நிலைக்கு தள்ளப்படுவதால் உலக வாழ்வில் நிம்மதி இழந்தவர் மறுமை வாழ்விலும் தோல்வி
அடைகிறார்.
ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து
இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது. தனக்காகவும்
தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை
விட்டு விட்டு அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்குத்தான் அது சாதகமாக இருக்கும்.
அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக
அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை. என்று நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: (மிஷ்காத்)
இது போன்ற பழக்கம் யாரிடமாவது இருந்தால் புனித
ரமளான் மாதத்தில் தவ்பா செய்து விடுங்கள் இதுவே
இறையச்சத்திற்கு எடுத்துக் காட்டாகும். இறையசச்த்தை ஏற்படுத்துவதற்காகத் தான் ரமளான்
மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது ரமளானை அடைந்தும் ஒருவர் தன்னை சீர்திருத்திக்கொள்ளாவிடில்
அவர் நாசமைடைந்து விட்டார் என்று அன்னல் நபி (ஸல்) அவர்கள் கூற வானவர் ஆமீன் கூறி இருக்கிறார்கள்.
இன்று பெரும்பாலான மக்கள் பொருளீட்டுவதற்காக அரபு
நாடுகளுக்கு வந்து முக்கியப் பொறுப்புகளில்
அமர்ந்திருப்பதால் கவனத்துடன் பொருளீட்ட வேண்டும் என்பதற்காகன ஓர் நினைவூட்டல் மடல்
இது.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின்
தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி உலகில் நிம்மதியாகவும், அதனால்
மறுமையில் வெற்றியாளர்களாகவும் ஆகும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக
!
அர்த்தமுள்ள கோபம்
திருட்டு
என்பது சமுதாயத்தை சீரழிக்கும் தீமை என்றால் அன்பளிப்பு என்றப் பெயரில் பெறப்படும்
கையூட்டுகள் அரசு கஜானாவை காலியாக்கி உலக வங்கியிடம் நாட்டை கடனாளியாக்கிடவும், தனியார் நிறுவனங்களை திவாலாக்கி முதலாளி மார்களை தலையில் துணியை பொட்டுக் கொண்டு தெருவுக்கு அனுப்பிடவும் போதுமானத் தீமைகளாகும்.
அரசுக்கு
சேர வேண்டியது முறையாக வந்து சேர வேண்டும், முதலாளி மார்களுக்கு வந்து சேர வேண்டியது முறையாக வந்து சேர வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள், மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இது போன்ற அன்பளிப்புகளை
இனி வரும் காலங்களில் பெறக்கூடாது என்பதற்காக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்களை திரட்டி கோபத்துடன் கண்டித்து
உரை நிகழ்த்தியதுடன் நில்லாமல் அல்லாஹ்விடமும் இதை ஒப்படைத்தார்கள்.
சாதாரண ஒரு மனிதன் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் காரியத்தை செய்திருந்தால் அவரை தனிமையில் வைத்து அண்ணல் அவர்கள் கண்டித்திருப்பார்கள் அவர் அரசு அதிகாரி என்பதால் தான் மக்களைத் திரட்டி கண்டித்தார்கள்.
மதீனாவில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இது தெரிவதுடன், மதீனா அல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சென்றடையும் நோக்கில் செய்தார்கள்.
அண்ணல் அவர்களின் இந்த அழகிய வழிமுறையை உலகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் பின்பற்றி இருந்தால் அந்தந்த நாட்டு மக்கள் நிம்மதியாக உண்டு புசித்து வாழ்க்கையை கழிப்பதற்கு அந்தந்த நாட்டில் விளையும் வளங்கள் போதுமானதாக இருந்திருக்கும்.
நாட்டையும், மக்களையும்
பாதிக்கச் செய்யும் இந்த தீமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்பதற்காக
அண்ணல் அவர்களுக்கு இந்நிகழ்வு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அண்ணல் அவர்களை அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக ஆக்கி இருப்பதால் சாதாரண குடிமகன் தன்னுடைய வாழ்வை நிம்தியாக கழிப்பதற்கு தேவையான முன்னுதாரணங்கள் அண்ணல் அவர்களிடம் இருக்கிறது நாடாளும் மன்னன் நாட்டில் குழப்பங்கள் நிகழாமல் ஆட்சி செய்வதற்கு தேவையான முன்னுதாரணங்களும் அண்ணல் அவர்களிடம் இருக்கிறது.
அனைவரும் அவற்றை பின் பற்றி வாழ்ந்தால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற நன் மக்களாக முடியம்.
தீமையைக் காணும் பட்சத்தில் தேவையான
அளவு கோபத்தை வெளிப்படுத்தும் செயல் வீரனாகவும், தேவை இல்லாத இடத்தில் கோபத்தை முற்றாக அடக்கி ஆளும் மாவீரனாகவும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ
وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104.
நன்மையை
ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.
அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்